Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
17 ஆண்டுகளுக்கு பின் அம்பை தேரோட்டம்! முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான அய்யனார் சிலைதிருவாரூரில் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2015
12:06

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, ஆலடிக்கருப்பூரில், 9ம் நூற்றாண்டை
சேர்ந்த அய்யனார் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம், குடவாசல்
தாலுகாவிற்கு உட்பட்ட மணப்பறவை, அடவங்குடி, மேலபாலையூர், விடயல்கருப்பூர், ஆலடி
கருப்பூர் உட்பட, 10க்கும் மேற்ப்பட்ட ஊர்களில் தொல்லியல் வல்லுநர் குடவாயில் சுந்தரவேலு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பஷீர் அகமது ஆகியோர் கடந்த, இரண்டு தினங்களுக்கு முன் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆலடிக்கருப்பூரில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய, 9ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தொல்லியல் வல்லுநர் சுந்தரவேலு கூறியதாவது;இந்த அய்யனார் சிலை, 9ம்
நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்த சிலையானது பேரெழில் மிக்க அற்புதப்படைப்பாக
உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் சிகை அலங்காரம் ஜடாபாரம் போல், வேறு எந்த ஐயனாரிலும் காண இயலாது. தேர்வடம் போல், இருபெரும் உருட்டல்கள் ஒன்றின் மீது ஒன்று அமைக்கப்பட்டுள்ளன.

படிக மணிகள் கோர்த்துள்ளதை போல், முடிச்சுருள்களின் செதுக்கு வேலைப்பாடுடன் உள்ளது.வலது காதினில் பனை ஓலைச்சுருள் சொருகப்பட்டுள்ளது. இடது காது
வெறும் நீள் துளையுடன் ஆபரணம் ஏதுமின்றி உள்ளது. கழுத்தில், பெரிய சதுரக் கற்கள் பதித்த நெக்லஸ் (காரை) மேற்கையில் வளையும் கீழ்க் கையை இரு கம்பி வளையல்களும்
அணிவிக்கப்பட்டுள்ளன. இடையில், அலை மடிப்புகளுடன் கூடிய ஆடை விளங்குகிறது.வலது கையில் சிறு மலர் தரித்துள்ளது. இடது கை தண்ட அஸ்தமாக நீட்டப்பட்டுள்ளது. இந்த சிலையின் உயரம், 112 செ.மீ., உள்ளது. இதன் காலம், 9ம் நூற்றாண்டாக இருக்கலாம், என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar