விருத்தாசலம்: விருத்தாசலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கொளஞ்சி, ஆய்வாளர் சுபத்ரா, மேலாளர் குருநாதன் முன்னிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், கோவில் பணியாளர்கள் 45 பேர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 7 லட்சத்து 91 ஆயிரத்து 714 ரூபாய் ரொக்கம், 12 கிராம் தங்கம், 220 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. கடந்த ஏப்ரல் மாத திறப்பின்போது, 8 லட்சத்து 59 ஆயிரத்து 131 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.