கடலூர்: கடலூர் அடுத்த பில்லாலி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் 72ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று துவங்குகிறது. தினமும் வீதியுலா நடக்கிறது. 30ம் தேதி மாலை 4:00 மணிக்கு பக்காசூரனுக்கு சோறு போடுதலும், 1ம் தேதி காலை 10:30 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 2ம் தேதி, கரக உற்சவம், 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீ மிதி உற்சவம் நடக்கிறது.