வால்பாறை: வால்பாறையில் நடந்த பிரதோஷ பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. அங்கு நடந்த பிரதோஷ பூஜையில் காசிவிஸ்வநாதருக்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிேஷகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.