Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் கோவிலில் அங்க ... அவிநாசி கோவில்களில் பொங்கல் விழா: பக்தர்கள் பரவசம்! அவிநாசி கோவில்களில் பொங்கல் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை!

பதிவு செய்த நாள்

06 ஆக
2015
11:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அவதானபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். விழாவின், முக்கிய நிகழ்வான பூங்கரகம் தலை கூடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த அவதானபட்டியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மாரியம்மன் திருவிழா நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழாவில், இரண்டாம் நாள் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து, பம்பை மேளம், கோலாட்டம் மற்றும் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும் நடந்தது.

விழாவின், முக்கிய நிகழ்வான பெண்கள் மாவிளக்கு எடுக்கு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், அவதானபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு, சிறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, மாவிளக்கு எடுத்து மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து, பூங்கரகம் தலை கூடும் நிகழ்ச்சி கோவிலுக்கு எதிரே நடந்தது. இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர். இதனையடுத்து, பக்தர்கள் நேர்த்தி கடனாக கோவிலில், ஆடுகளை பலியிட்டு சமைத்து, உறவினர்களுக்கு விருந்தளித்தனர். இதன்படி, நேற்று மதியம் மட்டும் கோவில் வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டது. கோவில் திருவிழாவையொட்டி, அவதானபட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar