கோட்டை மாரியம்மன் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2015 02:08
சேலம்: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையையொட்டி, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், கோவிலை சுற்றி உருளுதண்டம் (அங்க பிரதட்சணம்) செய்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். மூலவர் கோட்டை பெரிய மாரியம்மன் அம்மன் சிறப்பு தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி, சேலத்தில் இன்று(05-08-15) விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்றைய நாளுக்குப் பதிலாக வரும் 12ம் தேதி பணிநாள் என மாவட்ட கலெக்டர் சம்பத் அறிவித்துள்ளார்.