தசாவதாரத்தில் மகாவிஷ்ணுவே மனிதனாக வந்து வாழ்ந்தது ராமாவதாரத்தில் தான். ராமரின் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், குரு, சனி, செவ்வாய் என ஐந்து கிரகங்கள் ஒரே நேரத்தில் உச்ச ஸ்தானத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பூஜையறையில் ராம ஜாதகத்தை வைத்து வழிபடுவதோடு, தினமும் 108 முறை ஸ்ரீராம ஜெயம்மந்திரத்தை எழுதிவந்தால் கிரகதோஷம் நீங்கும். திருமணயோகம்,குழந்தை பாக்கியம், செல்வ வளம்பெருகும் என்பது நம்பிக்கை.