தேய்பிறை அஷ்டமியன்று ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை, விரதமிருந்து வழிபட்டால் வளமான வாழ்வு அமையும். விரத நாளில் காலையில் நீராடி பைரவருக்கு மலர் சூட்டி பால் பாயாசம், சுண்டல், பழங்கள் நைவேத்யம் செய்து வழிபடுங்கள். ஞாயிறன்று ராகு காலத்திலும்(மாலை 4.30- 6.00) இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.