Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ... ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல்: கோலாகல விழா! ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொதிக்கும் எண்ணையில் கை விட்டு சுட்ட வடை: ரூ.31 ஆயிரத்துக்கு ஏலம்!
எழுத்தின் அளவு:
கொதிக்கும் எண்ணையில் கை விட்டு சுட்ட வடை: ரூ.31 ஆயிரத்துக்கு ஏலம்!

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
11:08

திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே, ஆதிபராசக்தி அம்மன் கோவில் விழாவில், கொதிக்கும் எண்ணையில், பக்தர் கையாடல் சுட்ட வடை, 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஆடிப்பூரம் விழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, யாக பூஜை, 108 பால்குடம் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அந்தரத்தில் கயிற்றில் தொங்கியபடி வந்து, பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவித்தனர். அதன்பின், பக்தர் ஒருவர், தன் மார்பில் உரலை வைத்து, அதில் மற்றவர்கள் மஞ்சள் போட்டு இடித்தனர். அதை தொடர்ந்து, கொதிக்கும் எண்ணையில் கையை விட்டு, பக்தர் ஒருவர் கையால், ஏழு வடைகள் சுடப்பட்டது. இந்த வடைகளை, குழந்தையில்லாத பெண்கள் சாப்பிட்டால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், ஏழு வடைகளும் ஏலம் விடப்பட்டது. பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். ஏழு வடைகளும், 31 ஆயிரத்து, 80 ரூபாய்க்கு ஏலம் போனது. அதிகபட்சமாக ஒரு வடை, 9,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல், பக்தர் மார்பில் உரலை வைத்து இடித்த மஞ்சளை, திருமணமாகாத இளம்பெண்கள் பிரசாதமாக வாங்கி சென்றனர். தொடர்ந்து, இரவில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar