புதுப்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2015 11:08
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, 26ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று (27ம் தேதி) காலை 6:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, 108 வகை திரவியங்கள், தீபாராதனை, யாத்ராதானம், கடம்புறப்பாடாகி காலை 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.