பதிவு செய்த நாள்
29
ஆக
2015
01:08
நங்கவள்ளி: நங்கவள்ளி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், தேவாங்கர் குல மக்களின் பூணூல் அணியும் விழா, நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும், ஆவணி மாதம், திருவோணம் நட்சத்திரத்தில், புதிதாக பூணூல் அணிவதை, தேவாங்கர் குல மக்கள் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினத்தில் சவுடேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி, அம்மனுக்கு முன்னால் புதிய பூணூலை அணிந்து கொள்வர். நேற்று நடந்த பூணூல் பண்டிகையின்போது, நங்கவள்ளி சவுடேஸ்வரி அம்மன் கோவில், ஜலகண்டாபுரம் ஏரிக்கரை சவுடேஸ்வரி அம்மன், பாப்பிச்செட்டியூர், மலையம்பாளையம் உள்ளிட்ட சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், தேவாங்கர் குல மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, புதிய பூணூலை அணிந்து கொண்டு, விழாவை கொண்டாடினர்.