பதிவு செய்த நாள்
29
ஆக
2015
01:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடிப்பூரம் விழாவில், பக்தர்கள், 36 லட்சம் ரூபாயை, உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூர விழா, கடந்த, 17ம் தேதி முதல், 19ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணினர். இதில், 35,95,239 ரூபாய் ரொக்கம், 300 கிராம் தங்கம் மற்றும் 4,138 கிராம் வெள்ளி ஆகியவை கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளன.