Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கோவில் ... ராஜநாகலட்சுமி அம்மன் கோவில் ஆக., 4ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.4 லட்சம் காணிக்கை வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2011
12:07

சேலம் : சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், உண்டியல் மூலம் ஒரு மாதத்தில், 4 லட்சத்து, 7, 970 ரூபாய் வசூலாகியுள்ளது. சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில், பெருவாரியான மக்களின் வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கோட்டை மாரியம்மன் கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலில் இருந்து காணிக்கையை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எடுப்பது வழக்கம். கடந்த ஜூன் 20ம் தேதி கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்ட போது, பக்தர்கள், 5 லட்சத்து, 59 ஆயிரத்து, 792 ரூபாய் கணிக்கை செலுத்தியிருந்தனர். கடந்த மாதம் உண்டியலில் இருந்து காணிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஆடி பண்டிகை துவங்குவதால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிரந்தர மற்றும் திருப்பணி உண்டியலை திறந்து நேற்று காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மாரியம்மன் கோவிலில் நிரந்தரமாக வைக்கப்பட்ட பத்து உண்டியலும், திருப்பணிக்காக வைத்த ஒரு உண்டியலும் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வரதராஜன், சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், இரண்டாம் பூட்டு அலுவலரும், ஆய்வளாருமான தமிழரசு, கோவில் நிர்வாக அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில், பத்து நிரந்தர உண்டியல் மற்றும் ஒரு திருப்பணி உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணியில், 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியலில், 3 லட்சத்து, 2,562 ரூபாய், 35 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பணி உண்டியலில், ஒரு லட்சத்து, 5,408 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில், 4 லட்சத்து 7, 970 ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar