Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கோவில் ... ராஜநாகலட்சுமி அம்மன் கோவில் ஆக., 4ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.4 லட்சம் காணிக்கை வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2011
12:07

சேலம் : சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், உண்டியல் மூலம் ஒரு மாதத்தில், 4 லட்சத்து, 7, 970 ரூபாய் வசூலாகியுள்ளது. சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில், பெருவாரியான மக்களின் வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கோட்டை மாரியம்மன் கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலில் இருந்து காணிக்கையை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எடுப்பது வழக்கம். கடந்த ஜூன் 20ம் தேதி கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்ட போது, பக்தர்கள், 5 லட்சத்து, 59 ஆயிரத்து, 792 ரூபாய் கணிக்கை செலுத்தியிருந்தனர். கடந்த மாதம் உண்டியலில் இருந்து காணிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஆடி பண்டிகை துவங்குவதால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிரந்தர மற்றும் திருப்பணி உண்டியலை திறந்து நேற்று காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மாரியம்மன் கோவிலில் நிரந்தரமாக வைக்கப்பட்ட பத்து உண்டியலும், திருப்பணிக்காக வைத்த ஒரு உண்டியலும் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வரதராஜன், சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், இரண்டாம் பூட்டு அலுவலரும், ஆய்வளாருமான தமிழரசு, கோவில் நிர்வாக அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில், பத்து நிரந்தர உண்டியல் மற்றும் ஒரு திருப்பணி உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணியில், 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியலில், 3 லட்சத்து, 2,562 ரூபாய், 35 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பணி உண்டியலில், ஒரு லட்சத்து, 5,408 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில், 4 லட்சத்து 7, 970 ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar