திருமலை பிரம்மோற்சவ இரண்டாம் நாள் கண்கவர் நிகழ்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2015 12:09
திருப்பதி: திருமலையில் நடந்துவரும் பிரம்மாண்ட பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளில், காலை சின்ன சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்பசுவாமி மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுவாமிக்கு முன்பாக வேதபண்டிதர்கள் வேதகோஷமிட்டபடி சென்றனர் அவர்களுக்கு பின்னால் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த வண்ணமயமான அற்புதமான ஆன்மீக நிகழ்வைக்காண மாடவீதியை சுற்றியுள்ள பார்வையாளர் காலரியில் மக்கள் குழுமியிருந்தனர்.ஒவ்வொரு காலரியிலும் சுமார் 75ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முதல் நாள் இரவு ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு பராம்பரிய முறைப்படி பட்டு வஸ்திரம் சுமந்துவந்து பெருமாளுக்கு சாத்தினார், அன்று இரவு நடைபெற்ற பெரிய சேஷ வாகன உலாவிலும் கலந்து கொண்டார்.