திருமலையில் பிரம்மாண்டமாய் துவங்கிய பிரம்மோற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2015 12:09
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலின் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் குதுாகலமாக துவங்கியது.இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம் முதல் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கருட சின்னம் பொறிக்கப்பட்ட கொடியினை கோயிலின் உள்ளே உள்ள பிரதான பிரகாரத்தில் அமைந்திருக்கும் கொடி மரத்தில் அர்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க ஏற்றினர்.கருடர் விண்ணுலகில் உள்ள பிரம்மன், இந்திரன், வாயு பகவான், குபேரன் மற்றும் சப்தரிஷிமார்களையும் பிரம்மோற்சவம் காண அழைப்பதே இந்த கொடியேற்றத்தின் நோக்கமாக கருதப்படுகிறது. ஒன்பது நாட்களும் கோவிலின் உள்ளே உள்ள சீனிவாசப்பெருமாள் உற்சவமூர்த்தி மலையப்பசுவாமியாக வெவ்வேறு வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இந்த நாட்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் கலைவிழாக்குழுவினர் மாடவீதிகளில் சுவாமி முன் ஆடிப்பாடி செல்வர். இவர்களது ஆட்டம் பாட்டத்தை மாடவீதிகளில் குழுமியிருக்கும் பக்தர்கள் பார்த்து மகிழ்வர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவில் கோபுரங்களும் திருமலையும் வண்ணவிளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.கொடிமரம் அமைந்திருக்கும் இடம் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.