Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளயபட்சம் என்றால் என்ன? மூட்டு வலிக்கு ஒரு பாட்டு! மூட்டு வலிக்கு ஒரு பாட்டு!
முதல் பக்கம் » துளிகள்
வீட்டில் சண்டை வராமல் இருக்க பதினைந்தே நாள் பயிற்சி!
எழுத்தின் அளவு:
வீட்டில் சண்டை வராமல் இருக்க பதினைந்தே நாள் பயிற்சி!

பதிவு செய்த நாள்

29 செப்
2015
12:09

எப்ப பாருங்க... அந்த வீட்டிலே புருஷன், பெண்டாட்டி சண்டை, பிள்ளைகளும், பெத்தவங்களும் சண்டை, அக்கா, தங்கச்சிக்குள் அறவே ஆகது. அண்ணனும், தம்பியும் கீரியும் பாம்பும் மாதிரி...இப்படி சில வீடுகளைப் பற்றி பேச்சு அடிபடும். இந்த சண்டையில் இருந்து விடுதலை பெற மகாளய பட்சம் என்னும் 15 நாட்கள் பயிற்சி எடுத்தால் போதும்.பிதுர்களை வணங்கும் புண்ணிய காலம் மகாளயபட்சம் ஆகும். இந்த நாட்கள் பொதுவாக புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும். பவுர்ணமியை அடுத்த பிரதமை திதியில் தொடங்கி, அமாவாசையன்று மகாளயபட்ச காலம் நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர் நமக்கு ஆசிவழங்குவதற்காக பிதுர்லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற தெய்வீக நுõல்கள் இந்த பட்சத்தின் பெருமையைப் போற்றிக் கூறியுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்த நாட்களில் நம் வீடுகளை மிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. அப்படி சண்டை போட்டவர்களெல்லாம் பழைய பகையை மறந்து விட வேண்டும். ஒற்றுமையாக இணைந்து ஏதேனும் தீர்த்தக்கரைக்கு போய் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து விட்டு வர வேண்டும். இதனால், சண்டை தீர்வதற்கான ஆசிர்வாதத்தை முன்னோர் செய்வர்.

இந்த காலத்தில், வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் போன்ற கடற்கரைத் தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். காகத்திற்கு அன்னமிட வேண்டும். பசுவுக்கு புல், பழம், அகத்திக்கீரை கொடுக்க வேண்டும். நம் முன்னோர் படங்களுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும்.இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது. ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் திருமாலே பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. தெய்வப்புலவர் திருவள்ளுவர் இல்லறத்தார் கடமைகளில் முதல் கடமையாக முன்னோர் வழிபாட்டைக் (தென்புலத்தார் வழிபாடு) குறிப்பிடுகிறார். திருமணத்தடை, புத்திரப்பேறு இன்மை, கடன்தொல்லை, மனக்கவலை, நவக்கிரக தோஷங்கள் என்று வாழ்வின் அனைத்து விதமான சிரமங்களையும் போக்கும் ஈடுஇணையற்ற பிதுர்வழிபாட்டினை இம்மகாளய புண்ணிய காலத்தில் செய்து பயனுடையதாக்குவோம்.

 
மேலும் துளிகள் »
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar