Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையை மையமாக வைத்து சுற்றுலா ... திருஅருட்பிரகாச வள்ளலார் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனதுக்கு தேவை சந்தோஷம்:ரிஷி நித்ய பிரக்யாஜீ சொற்பொழிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2015
11:10

மதுரை: நம் மனதில் வருத்தம், அசவுகரியத்திற்கு இடம் கொடுக்காமல், மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,” என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் சீடரான ரிஷி நித்ய பிரக்யாஜீ கூறினார்.மதுரையில் ’வாழும் கலை’ அமைப்பு சார்பில் ’ஆனந்த லயம்’ நிகழ்ச்சியில், அவரது சொற்பொழிவு:நம் மனதில் வருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நம் வாழ்க்கை ஒரு ராட்டினம் போன்றது. சில நேரம் மேலேயும், சில நேரம் கீழேயும் வருகிறோம். நம்முடைய தவறுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அது நம்மை விட்டுச் செல்லாமல் இருந்து விடுகிறது. நம் மனதில் வருத்தம், அசவுகரியத்தை தவிர்த்து சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இயற்கை நமக்கு எளிமையான வழியை கொடுத்திருக்கிறது; அது நமது மூச்சு. மற்றவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்; ஆனால், நம் மனம் என்ன சொல்லுகிறதோ, அதை செயல்படுத்த வேண்டும். மற்றவர்கள் உங்களைப் பற்றி எதுவும் நினைக்கலாம்; அந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, நீங்கள் தான் அதிகமான சுதந்திரத்தை அடைகிறீர்கள்.சுற்றி இருப்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என பயப்படும்போது நம் உள்உணர்வை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். உள் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதன் மூலம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும், என்றார்.பஜனை, பிரணாயாம பயிற்சி, தியானம் நடந்தது. ’வாழும் கலை’ ஆசிரியர்கள் தரணீதரன், அலமேலுமங்கை, ரஷ்னா பினானி, தன்னார்வ தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar