Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரிசியில் அம்மா படிப்பை துவங்கிய ... விருதுநகரில் புலி வேடமிட்டு நேர்த்திக்கடன் விருதுநகரில் புலி வேடமிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு அரண்மனையில் யானைகளுக்கு வெல்லம், கரும்பு
எழுத்தின் அளவு:
மைசூரு அரண்மனையில் யானைகளுக்கு வெல்லம், கரும்பு

பதிவு செய்த நாள்

23 அக்
2015
10:10

மைசூரு: மைசூரு அம்பாவிலாஸ் அரண்மனையில், ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. யது வம்சத்தின், புதிய மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், ஆர்வத்துடன் பூஜைகள் செய்ததை, ராணி பிரமோதா தேவி, அரச குடும்பத்தினர் கண்டுகளித்தனர். ஆயுத பூஜையை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணியில் இருந்து, அரண்மனையில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், பூஜைகள் நடந்தன. அரண்மனை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சண்டி ஹோமம், கணபதி ஹோமம் உட்பட பல வகையான ஹோமங்களை, அரண்மனையின் தலைமை அர்ச்சகர் நடத்தி வைத்தார். அம்பாவிலாஸ் அரண்மனை வளாகத்திலேயே உள்ள கோடி சோமேஸ்வரர் கோவிலில், யதுவீர் சிறப்பு பூஜைகள் செய்தார். அரண்மனையின் பட்டத்து யானை, குதிரை மற்றும் பசுவுக்கும் மலர் துாவி, பூஜைகள் செய்தார். இதே வேளையில், தசரா உற்சவத்தின் முக்கிய அம்சமான ஜம்பு சவாரியில் கலந்து கொண்டு, தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜுனா உட்பட, 12 யானைகளுக்கும், வனத்துறை அதிகாரிகள் பூஜை செய்தனர். யானைகளுக்கு வெல்லம், கரும்பு, தேங்காய், வாழைப்பழங்கள் வழங்கப்பட்டன.அரண்மனையில், அரசர்கள் போருக்கு பயன்படுத்திய வாள்கள், கேடயங்கள், பீரங்கிகள், ஈட்டிகள் உட்பட அனைத்து ஆயுதங்களுக்கும், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ராணி பிரமோதா தேவி, யதுவீரின் வருங்கால மனைவி திரிஷிகா குமாரி உட்பட குடும்பத்தினர், மாடவீதியில் நின்று பார்த்தனர். நேற்று மாலையும், அரண்மனையில் பல வகையான ஆன்மிக, கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. வறட்சி, விவசாயிகள் தற்கொலையை காரணம் காட்டி, அரசு இம்முறை தசரா திருவிழாவை எளிமையாக கொண்டாடினாலும், அரச குடும்பத்தினர் வழக்கம் போல், சிறப்பாகவே கொண்டாடினர். சம்பிரதாயப்படி செய்ய வேண்டிய அனைத்து பூஜை, புனஸ்காரங்களை குறைவின்றி செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar