Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் ... ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்! ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

28 அக்
2015
11:10

விருத்தாசலம்: ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 500 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியன்று, சிவாலயங்களில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். இந்நாளில் லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் பெரியநாயகர் சன்னதியில் பெரியநாயகர், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, அரிசி மாவு, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், கலச தீர்த்தம் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில் காய்கறிகள், பழங்கள், அன்னம் போன்றவற்றால் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அதன்படி, 500 கிலோ அரிசி அன்னம் இளம்சூட்டில் லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையுடன், 9:00 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், ஏகநாயகர் கோவிலில் நேற்று காலை 10:00 முதல் பகல் 1:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, தீபாராதனை நடந்தது. 1:00 மணிக்கு மேல் மாலை 6:00 மணிக்குள் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar