Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனியப்பனுக்கு நேர்த்திக்கடனாகும் ... திருப்புவனத்தில் சினிமா விநாயகர்! திருப்புவனத்தில் சினிமா விநாயகர்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12 ராசி கற்களுடன் காசி விஸ்வநாதர் கோயில்!
எழுத்தின் அளவு:
12 ராசி கற்களுடன் காசி விஸ்வநாதர் கோயில்!

பதிவு செய்த நாள்

07 நவ
2015
10:11

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கென ஏராளமான சிறப்புகள் உள்ளன. சர்வதேசப்புகழ் வாய்ந்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வண்ண ரங்கோலிகளாலான மூன்றாம் பிரகாரம், 1893ல் சிகாகோ மாநாடு முடித்து இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் கால் பதித்த பாம்பன் குந்துகால், நுõற்றாண்டு பெருமையுடைய பாம்பன் ரயில் பாலம், மன்னார் வளைகுடா தீவுகள் இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த பூமியான ராமேஸ்வரம், மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. மாவட்டத்தில் எண்ணற்ற ஊரணிகள் உள்ளன. இதில் 300 ஆண்டு பழமை வாய்ந்த முகவை ஊரணியை பராமரிக்க தவறியதால் அதனுள் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் புதைந்தது. இக்கோயில் கடந்த 2004ல் மீட்கப்பட்டது. 16 துõண்களை உடைய இக்கோயிலின் மேற்புறத்தில் 12 ராசிகளுடன் கூடிய கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீராம நாம உழவாரப்பணி குழு உறுப்பினர் சிவசங்கரன் கூறுகையில், 350 ஆண்டுகளுக்கு மன்னர் கிழவன் சேதுபதி காலத்தில் முகவை ஊரணியில் எடுக்கப்பட்ட மண்ணில் தயாரான கற்களால் அரண்மனை கோட்டை சுவர் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகிறது. முகவை கரையில் புதைந்த காசி விஸ்வநாதர் கோயிலை தலைவர் சந்தான வேலு தலைமையில் உழவாரப் பணி செய்து மீட்டோம். இதன் மேற்புறத்தில் 12 ராசிகளுடன் கூடிய கருங்கல் உள்ளதால் இங்கு சுவாமி வீதியுலா நடந்துள்ளது என்பதற்கு தக்க சான்றாகும். இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த அருள்வாக்கிற்கு காத்திருக்கிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar