திருமலையில் மீண்டும் 300 ரூபாய் டிக்கெட் கவுண்டர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2015 02:11
திருப்பதி: திருமலை சீனிவாசப்பெருமாளை தரிசிக்க பெரும்பாலும் ஆன்லைனில் புக் செய்துவிடுகின்றனர்.அல்லது அவரவர் ஊரில் உள்ள திருமலை திருப்பதி மையத்தில் புக் செய்துவிடுவார்கள். எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள் 300 ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு தரிசனம் செய்யும் நடைமுறை முன்பு அமுலில் இருந்தது.இப்போது இல்லை. இதனால் சிரமப்பட்டு மலையேறி வந்தவர்கள் பெருமாள் தரிசனம் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பெருமாளை தேடிவரும் பக்தர்கள் எப்படியும் தரிசனம் செய்யாமல் போகக்கூடாது ஆகவே மீண்டும் பகல் முழுவதும் 300 ரூபாய் டிக்கெட் கவுண்டரை திறந்து இருக்குமாறு முதல்வர் அலுவலக உத்திரவின்படி அதற்கான கவுண்டர்கள் தற்போது திறக்கப்பட்டுவிட்டது. மலையில் மொத்தம் மூன்று கவுண்டர்கள் இருக்கும் இதல் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை 300 ரூபாய் டிக்கெட் கொடுக்கப்படும். மொத்தம் 5ஆயிரம் வரை டிக்கெட்டுகள் வழங்கப்படும். டிக்கெட் எடுப்பவர்கள் தங்களுக்கான அடையாள அட்டையை காண்பிப்பதுடன் விரல் ரேகையையும் பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் எடுத்தவர்கள் அன்றைக்கே தரிசனம் செய்துவிடலாம்.