திருப்பதி: திருமலையில், ஏழுமலையானுக்கு நடக்கும் அனைத்து உற்சவங்களும், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி, திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு இன்று டிச., 8ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை, ஒன்பது நாட்கள், வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று பத்மாவதி தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.