Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி கோவிலில் சூரசம்ஹார ... திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு சாந்தாபிஷேகம்! திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மின்ன தயாராகும் கார்த்திகை தீபங்கள்!
எழுத்தின் அளவு:
மின்ன தயாராகும் கார்த்திகை தீபங்கள்!

பதிவு செய்த நாள்

20 நவ
2015
10:11

பொள்ளாச்சி: கார்த்திகை திருநாளை முன்னிட்டு, அகல் விளக்கு தயாரிக்கும் பணி பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. கிராமத்து வீடுகளில்,  இன்னமும் வியப்பை ஏற்படுத்தி வருகின்றன, மண்பாண்ட பொருட்கள். மண் பானை, விளக்கு, சிற்பங்கள் தயாரிப்பதில், மண்பாண்டக்  கலைஞர்களின் கைவண்ணம் மெச்ச வைக்கும்; இது தான், இவர்களின் வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்து வருகிறது. நாகரிக மாற்றத்தை நோக்கி  நகராத காலகட்டத்தில், குடிநீர், பொருட்கள் சேமித்து வைத்தல் உட்பட பல உபயோகங்களுக்கு, மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.  கால மாற்றத்தில், இதுபோன்ற பொருட்கள், மெல்ல, மெல்ல, மறைந்து வருகின்றன. பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள்,  மண்பாண்ட சமையல் மூலம் நீங்கும் என, மருத்துவத் துறையினர், இப்போதும் சொல்லி வருகின்றனர். எத்தகைய மாற்றம் வந்தாலும், பெ ாள்ளாச்சி ஆர்.பொன்னாபுரம், ஆனைமலை, வடக்கிப்பாளையம், பூசாரிப்பட்டி உட்பட பல பகுதிகளில், எளிதாக கிடைத்து வரும் களிமண்ணை  பயன்படுத்தி, மண்பாண்ட பொருட்கள், உருவ பொம்மைகள், சாமி சிலைகள், தத்ரூபமாக வடிவமைக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டு  வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம், பொங்கல் பண்டிகை உட்பட விசேஷ நாட்களில், இப்பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும்.  தற்போது, கார்த்திகை தீபத்திருநாள் நெருங்குவதால், இத்தொழிலாளர்கள், விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள்  கூறுகையில், ‘கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, தீப விளக்குகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. சிறிய அளவிலான விளக்கு, ஒரு டஜன், 10 முதல், 12  ரூபாய், பெரிய அகல் விளக்கு, டஜன், 50 முதல், 75 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பெய்து வருவதால், களி  மண்ணால் தயாரிக்கப்படும் விளக்குகளை உலர வைப்பதில், சிக்கல் ஏற்படுகிறது; உற்பத்தியில், சற்று மந்தம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar