Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ... பம்பையில் ரூ.35 லட்சம் செலவில் அவசர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகழிமலையில் திருக்கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2015
11:11

கரூர் : கரூர் அருகே புகழிமலையில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமியை தரிசித்தனர். சூரனை வதம் செய்த பின் தெய்வானையை முருகன் திருக்கல்யாணம் செய்து கொண்ட நிகழ்ச்சி புகழிமலை முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு, கோவில் அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் மணமக்களான முருகன், தெய்வானை வழிபட்டனர். அதன் பின் ஊஞ்சலில் மணமக்கள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.முருகன், தெய்வானை, சிவன், பார்வதி, வீரபாகு சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். மணமேடைக்கு முன் குண்டம் ஏற்படுத்தி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர். இதைத்தொடர்ந்து முருகன், தெய்வானை கழுத்தில் தாலி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பல்வேறு தீபாராதனைகள் நடந்த பின் மகா தீபாராதனை பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடந்தது.மொய்விருந்து செய்த பக்தர்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

* டி.என்.பி.எல்., காகிதபுரம் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள வல்லப கணபதி கோவிலில் அமைந்துள்ள முருகன், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து இரவு, 8 மணிக்கு ஒரு சிறிய தேரில் முருகன்-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களால் கோவிலைச் சுற்றி தேர் வலம் வந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்று திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar