81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2026 05:02
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் சிலையுடன் கூடிய கோவில் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, அங்குரார்பனம், யாகசாலை மற்றும் கோ பூஜை நடந்தது. ரத்தினகிரி பாலமுருகன் சுவாமிகள் தலைமை தாங்கினார். கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகானந்த சுவாமிகள், மொரட்டாண்டி ஜனார்த்தன சுவாமிகள், மேல்மருவத்துார் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க நிறுவனர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். பின்னர் செம்பராம்பட்டு வெங்கட் குருக்கள் தலைமையில் கடம் புறப்பாடு செய்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் சின்னதம்பி சுவாமிகள் செய்திருந்தார். நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.