பதிவு செய்த நாள்
24
நவ
2015
11:11
பெ.நா.பாளையம்: கணுவாய் அருகே உள்ள ஸ்வாகதம் சாய் மந்திரில் சத்யசாய்பாபா ஜெயந்தி விழா, கொண்டாடப்பட்டது. கோவை தடாகம் ÷ ராடு, சோமையனுார் திருவள்ளுவர் நகரில் ஸ்வாகதம் சாய் மந்திர் உள்ளது. இங்கு பகவான் சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா கொண்டாட்டம், கடந்த, 21ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, மகா கணபதி ஹோமம், சனி, ராகு, கேது ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடக்கும் விழாவில், மகா ருத்ரஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், ஹயக்ரீவ ஹோமம், காலபைரவர் ஹோமங்கள் நடக்கின்றன. விழாவையொட்டி சிறப்பு வழிபாடு, பஜனை, பக்தி நாட்டியம், நாடகங்கள், இசை நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மதியம் அன்னதானம் நடக்கிறது. நேற்று, மூன்றாம் நாள், சத்யசாய்பாபா ஜெயந்தி விழாவையொட்டி மகா கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், சுக்த ஹோமம் ஆகியன நடந்தன. மாலையில் சி வார்ப்பணம், பகவான் ஊஞ்சல் வைபவத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தினமும் காகட ஆரத்தி, போக ஆரத்தி, துாப ஆரத்தி, ஷேஜ் ஆரத்திகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்வாகதம் சாய் மந்திர் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.