ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் கவுசிக ஏகாதசி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2015 11:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் கவுசிக ஏகாதசி திருவோண மண்டபத்தில் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 4 மணி வரை நடந்த நிகழ்ச்சியில் ஆண்டாள்,ரெங்கமன்னார், கருடாழ்வார்,பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் 12 ஆழ்வார்களுக்கு 108 போர்வைசார்த்தி, கவுசிக ஏகாதாசி புராணத்தை, வேதபிரான் அனந்தராமகிருஷ்ணன் பட்டர், சுதர்சனன் வாசித்தனர். பத்ரிநாராயணன் பட்டர் சிறப்பு பூஜைகள் நடந்தது. செயல்அலுவலர் ராமராஜா, ஸ்தானிகம் சத்தியநாராயணன், மணியம் கோபி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.