Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை செல்வ விநாயகர் கோவில் ... 4 ஆண்டுக்கு பின் நிரம்பிய கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை காணிக்கை எண்ணும் இடத்தில் நிர்வாண சோதனை!
எழுத்தின் அளவு:
சபரிமலை காணிக்கை எண்ணும் இடத்தில் நிர்வாண சோதனை!

பதிவு செய்த நாள்

24 நவ
2015
11:11

சபரிமலை: காணிக்கை எண்ணும் இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை நிர்வாண சோதனை நடத்த தேவசம்போர்டு ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு தினமும் கோடிக்கணக்கான பணம் காணிக்கையாக வருகிறது. கோயில் முன்பு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கன்வயர் பெல்ட் மூலம் எண்ணும் இடத்துக்கு செல்கிறது. இதுபோல அனைத்து இடங்களில் உள்ள காணிக்கை பெட்டியில் கிடைக்கும் பணம் இங்கு கொண்டு வரப்பட்டு எண்ணப்படுகிறது. கடந்த மகரவிளக்கு சீசன் நிறைவு பெறும் நேரத்தில் இங்கு பணம் திருடப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. 17 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.இதனால் இந்த ஆண்டு காணிக்கை எண்ணும் இடத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வேஷ்டி மட்டுமே உடுத்து செல்ல வேண்டும். சட்டை மற்றும் உள்ளாடைகள் அணியக்கூடாது. பணி முடிந்து செல்லும் போது வேஷ்டியை அவிழ்த்து உதறி காட்ட வேண்டும். இப்படி நடைபெற்ற சோதனை இங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் டிவியில் தெரிந்தது. இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சி பெற்ற பின்னரும் மனித உரிமை மீறலாக நடைபெறும் சோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருவிதாங்கூர் தேவசம் ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காணிக்கை எண்ணுவதை முழுக்க முழுக்க இயந்திரமயமாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வயது வித்தியாசம் இல்லாமல் துணிகளை அவிழ்த்து நடத்தும் சோதனையை ஏற்க முடியாது என்று அந்த சங்கம் கூறியுள்ளது.பணத்தை எடுக்க செல்லும் தனலெட்சுமி பேங்க் ஊழியர்கள் வேஷ்டி, துண்டு அணிந்து செல்கின்றனர். ஆனால் இங்கு பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸ் பேன்ட், ஷர்ட் போட்டு நிற்கின்றனர். என்ற கேள்வியையும் ஊழியர்கள் எழுப்பியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar