Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சியம்மன் கோவிலில் காலபைரவர் ... சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை! சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிரம்பாத அய்யனார் குளம் விழுப்புரத்தில் அவலம்!
எழுத்தின் அளவு:
நிரம்பாத அய்யனார் குளம் விழுப்புரத்தில் அவலம்!

பதிவு செய்த நாள்

05 டிச
2015
11:12

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை பெய்தும், அய்யனார் குளம் நிரம்பாதது நகர மக்களிடையே கடும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் நகரின் மையப் பகுதியான காந்தி சிலை அருகே உள்ளது அய்யனார் குளம். இரண்டு ஏக்கர் பரபரப்பளவில்  அமைந்துள்ள இக்குளத்திற்கு, கடந்த சில ஆண்டுகளாக, வரத்துக் கால்வாய்கள் முழுவதும் அடைபட்டு போனது.

மழை நீர் முழுவதும் திரு.வி.க., வீதி வழியாக சென்று, காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானம் மற்றும் ரயில்வே பாலம் வழியாகச்  சென்று வீணாகிறது. விழுப்புரம் கலெக்டராக இருந்த கோபால், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்தும் வகையில், நகரின் மையப் பகுதியில்  அமைந்துள்ள இக்குளத்திற்கு, மழைநீர் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். அதனால் கடந்த 5 ஆண்டிற்கு முன், இந்த குளம்  முழுவதும் நிரம்பியது. அதன் பின் வரத்து கால்வாய்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு,  குளத்திற்கான நீர் வரத்து தடைப்பட்டது. கடந்த  நுõறாண்டுகளுக்கு பின், தற்போது வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த குளத்தில் 25 சதவீதம் கூட, நீர்  நிரம்பவில்லை. நகராட்சியின் மெத்தனப் போக்கால், குளத்திற்கான வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி, தற்போது அடைபட்டு  கிடக்கிறது. இதனால் கோவில் திருவிழா நாட்களில், வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, குளத்தில் விடுகின்றனர். இயற்கையாக மழைக்  காலங்களில் இந்த குளம் நிரம்பினால், நகரின் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மூலம், வரத்து கால்வாய் களை சீர் செய்து, அய்யனார் குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar