திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2015 10:12
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று கார்த்திகை தெப்ப திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, மூலவருக்கு காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு, ஆலங்காட்டீசர் ஆலய சென்றாடு தீர்த்தக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வண்டார் குழலியம்மன் சமேத வடாரண்யேஸ்வரர் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தெப்பத்தில் மூன்று முறை உற்சவ பெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.