வால்பாறை கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2015 11:12
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த துர்க்கை அம்மன் பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இதைச்சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. சன்னதியில் இடது புறம் உள்ள துர்க்கை அம்மனுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் வரும் மூன்றாவது செவ்வாய்க்கிழமை என்பதால், நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன.