திருமால் வசிக்கும் வைகுண்டத்தை திருநாடு என்பர். அத்திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்கள் பசி, தாகம், உறக்கம் என்னும் எவ்வித உணர்வும் இல்லாமல், பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர். பரசவநிலையில் பெருமாளைப் புகழ்ந்து ஆடிப்பாடுவர். இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல், நாலாயிர திவ்ய பிரபந்தததைத் தொகுத்த நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அதற்காக திவ்ய பிரபந்தத்திற்கு நாட்டிய இசை அமைத்தார். அரையர் என்னும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை எனப்பட்டது. வைகுண்ட ஏகாதசி திருவிழா பெருமாள் கோவில் களில் பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடத்தப்படும். இந்த நாட்களில், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்துõர், ஸ்ரீரங்கம் ஆகிய திவ்யதேசங்களில் இந்த சேவை விசேஷமாக நடக்கும். ஸ்ரீவில்லிபுத்துõரில் ஆடி,தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு. கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை சம்பத் குமாரர் (செல்லப்பிள்ளை) கோவிலில், அபிநயம் இல்லாமல், தாளத்தோடு மட்டும் அரையர் சேவை நடத்தப்படுகிறது.