திருச்சனுார் பத்மாவதி கோயிலில் ஆயிரம் கூடைகளில் புஷ்பயாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2015 01:12
திருப்பதி: திருமலை திருப்பதி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஒன்றான திருப்பதி திருச்சனுார் பத்மாவதி கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.
நிறைவு நாளான்று பத்மாவதி தாயாரை அமைதியும் சந்தோஷமும் படுத்தும் வகையில் ஆயிரம் கூடைகளில் பல்வேறுவிதமான மலர்கள் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு கூடையிலும் ஐந்து கிலோ மலர்கள் நிறைந்திருந்தன. மலர்கூடைகள் பக்தர்களால் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பின்னர் பத்மாவதி தயாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.இந்த புஷ்ப யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.