திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2015 05:12
திருப்பதி: திருமலை திருப்பதி கோயில் நிர்வாகத்திற்கு உள்பட்ட திருப்பதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று(15ம் தேதி) தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை 8:34 மணிக்கு துவங்கிய தேர் நான்கு மாடவீதிகள் வழியாக வலம்வந்து 11 மணிக்கு நிலையயை அடைந்தது. தேரில் சர்வ அலங்காரத்துடன் உலா வந்த பத்மாவதி தாயாரை ஏாரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.