சபரிமலையில் பக்தர்களுக்கு பிஸ்கட், தண்ணீர்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2015 10:12
சபரிமலை: சபரிமலையில் அவசர காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகள் தயாரித்த அறிக்கைக்கு, பத்தணந்திட்டை கலெக்டர் ஹரிகிஷோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சபரிமலையில் அவசர காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் த-லைமையில் நடந்தது. அவசர நிலையை எதிர்கொள்ள நிலக்கல்லில் நிரந்தர அவசரகால சேவை மையம் தொடங்கவும், அதற்கான நிலம் கையகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அவசர காலங்களில் சன்னிதானம், பம்பையில் செய்ய வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்த திட்டத்துக்கும், பத்தணந்திட்டை முதல் பம்பை வரையிலான ரோடு பயணம் பாதுகாப்பாக அமைவதற்காக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைக்கும் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பம்பை நதியின் ஆழம் பற்றிய அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.கூட்டம் அதிகமாகும் போது பத்தணந்திட்டை முதல் பம்பை வரை வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் பட்சத்தில், பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.