செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. அன்று காலை பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4 :00 மணிக்கு லலிதா செல்வாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு கலச நீர் கொண்டு அம்மனுக்கு அபிஷேகமும், மகா புஷ்பாஞ்சலியும் நடந்தது. பூஜை களை ஈஸ்வர சிவன் செய்தார். அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினரும், ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.