Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பராசக்தி மாரியம்மன் கோவிலில் ... பகவதியம்மன் கோவிலில் இன்று வாகன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் பொங்கல் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2015
12:12

ஈரோடு: வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள், பால்குடம், தீர்த்தம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பொங்கல் வைபவம் வரும், 30ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முதலே அக்னிச் சட்டி எடுத்தல், அலகு குத்துதல், தீர்த்தக் குட ஊர்வலம் தொடங்கி விட்டது. வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீதியை சேர்ந்தவர்களும், தனித்தனியாக காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து கோவில் கம்பத்துக்கு ஊற்றினர். அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பறவை காவடி, திருவாச்சி, வேல், நாக்கு அலகுகள் குத்திய பக்தர்கள், கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இரவு வரை தீர்த்த குடங்கள் சுமந்து ஏராளமானோர் வந்தனர். இதனால் காவிரி ஆறு, கருங்கல்பாளையம், பவானி ரோடு, சக்தி ரோடு, கோவில் வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், திருவிழா கூட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும், வீரப்பன்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar