Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் ... ராமேஸ்வரம் கோயில் நடை இன்று சாத்தல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி உற்சவம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஆக
2011
11:08

காரைக்கால் : காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி உற்சவம் நடந்தது. சிவபெருமான் கலப்பையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காரைக்கால் தலத்தெரு பழங்காலத்தில் திருத்தெளிச்சேரி என வழங்கப்பட்டு வந்தது. இவ்வூர் மழையின்றி வரண்டு கிடந்ததால், சிவபெருமான் உழவன் வேடத்தில் வந்து நிலத்தை உழுது விதை தெளித்து கரையேறினார். அப்போது மழை பெய்ய துவங்கியது. விவசாயம் பெருகி வறுமை நீங்கி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் என்ற கதை வழங்கப்பட்டு வருகிறது. அந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் காரைக்கால் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விதை தெளி ஊற்சவம் நடக்கிறது.இக்கோவிலில் விதை தெளி உற்சவம் நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9 மணிக்கு ஸ்ரீ ருத்ர கலச பூஜைகள் மற்றும் ருத்ர பாராயணத்துடன் ஹோமம் ஆரம்பமானது. காலை 11.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாராதனையும், ருத்ர கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.நேற்று காலை சிவலோகநாதர் விஸ்வரூப தரிசனம், விதை தெளி உற்சவம் ஆகியவை நடந்தது. சிவபெருமான் உழவு மேற்கொள்ள கலப்பையை ஏந்தி சிவகாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கோவிலின் எதிரே உள்ள நிலத்தில் விதை தெளித்தனர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar