திட்டக்குடி: திட்டக்குடி பகுதி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அதனையொட்டி காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், சிறப்பு அபிஷேகம், திருப்பாவை ஓதுதல், சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு வெள்ளிக்கவச அலங்காரம், பூ அலங்காரத்தில், வடைமாலை சாத்துதல் நடந்தது. தொடர்ந்து 1008 சகஸ்ர நாமாவளி அர்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். திட்டக்குடி வதிட்டபுரம் அரங்கநாதபெருமாள் கோவிலில் காலை 5:00 மணி முதல் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வடைமாலை, துளசிமாலை உள்ளிட்ட மாலைகள் சார்த்தப்பட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுர ங்கநாதர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு பாலாபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. பகல் 2:00 மணிக்கு துளசிபொடி, திரவியபொடி, தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் வெண்ணைக்காப்பில் அலங்கரித்து, துளசிமாலை, வடைமாலை அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.