பதிவு செய்த நாள்
12
ஜன
2016
12:01
சென்னை: தமிழக அரசு சார்பில், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள, நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இப்புனிதப் பயணம், மார்ச் முதல், ஜூன் வரை மேற்கொள்ளப்பட உள்ளது. உதவித் தொகை பெற விண்ணப்பதாரர், குடும்பத்தினர், பாதுகாவலர், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.புனிதப் பயணச் செலவினத்தில், அரசு தரும், 20 ஆயிரம் ரூபாய் நீங்கலாக, மீதி தொகையை, விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும்; அதற்கான உறுதிமொழி வழங்க வேண்டும். ஏற்கனவே, இத்திட்டத்தில் புனிதப்பயணம் மேற்கொண்டவர், மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. மாவட்ட வாரியாக, பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பம் உள்ளவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 25ம் தேதி மாலை, 5:45 மணிக்குள், மேலாண் இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807 (5வது தளம்) அண்ணாசாலை, சென்னை - 2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.