ஈரோடு: பெருந்துறை தாலுகா, தென்முகம் தென்முகம் வெள்ளோட்டில், ராசா சுவாமி, நல்லமங்கையம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் முறைப்படி நேற்று நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தார். பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு வேள்வி, அபி?ஷகம், தீபாராதனை நடந்தது. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று 21ம் தேதி முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.