Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தி மலை., அண்ணாமலையார் கோவிலில் ... திருப்பரங்குன்றத்தில் 100 லிட்டர் பாலாபிஷேகம்! திருப்பரங்குன்றத்தில் 100 லிட்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை!
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை!

பதிவு செய்த நாள்

25 ஜன
2016
10:01

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழா நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். திருச்செந்தூர் முருகன் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்தனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 க்கு விஸ்வரூப தீபாரதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. மற்றகால வேளை பூஜைகள் தொடர்ந்து நடந்தது. காலை 7 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர். பக்தர்கள் காவடி, பால்குடம், அலகுகுத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்தனர். காலை 10 மணிக்கு <உச்சிக்கால அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாரதனை நடந்தது. பின் அலைவாய் உகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். உபயதாரர்கள் தரப்பில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. சுவாமியும், அம்பாளும் மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு மாலை காட்சியளித்தனர். பின் சுவாமி கோயில் வந்து சேர்ந்தார். இதில் லட்சணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.

"கந்தவேல் முருகனுக்கு அரோகராகோஷம் விண்ணை பிளந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டன. போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar