பதிவு செய்த நாள்
05
பிப்
2016
11:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயி லில் கட்டட கலை குறித்து நாமக்கல் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்து குறிப்பெடுத்துக்கொண்டனர். நாமக்கல் பள்ளிபாளையம், எக்சல் கல்லூரியில் கட்டடகலை பாட பிரிவு மாணவ, மாணவிகள் 130 பேர், தமிழ கத்தில் உள்ள பாரம்பரிய கோயில் களில் உள்ள கட்டடக்கலையை ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் ராமேஸ் வரம் கோயிலுக்கு வந்த மாணவர்கள், சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட உலக பிரசித்த மூன்றாம் பிரகாரம் தூண்கள், சிற்பங்கள், ராஜகோபுர கட்டு மானம், சுதைகள், ஒவியங்களை கண்டு பிரமித்தனர். அவற்றை குறிப்பெடுத்த மாணவர்கள், இன்று தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்கின்றனர். ஆய்வு பணி முடிந்ததும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். கல்லூரி பேராசிரியர் சரவணசந்துரு கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க கோயில்கள், வீடுகள், அரண்மனைகளின் நுட்பமான கட்டு மான பணி, கட்டட கலைகள் குறித்து திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ் வரம் திருக்கோயில்கள் மற்றும் காரைக் குடி நகரத்தார் வீடுகளில் மாணவர்கள் ஆய்வு செய்து, குறிப்பு எடுத்துள்ளனர். இது மாணவர்களின் பாடபிரிவுக்கு பெரிதும் உதவியாக அமையும். தமிழக கலாச்சாரம், பண்பாடு பல ஆயிரம் ஆண்டுக்கு பழமையானது என்பதற்கு கோயிலின் கட்டட கலைகள் தான் உதாரணம், என்றார்.