Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் ... திருத்தணி சாய்பாபா கோவில் 13ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் மகாமகம் விழா: பிப்., 14ல் 50 மடாதிபதிகள் சந்திப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2016
12:02

கும்பகோணம்: வரும், 14ம் தேதி, கும்பகோணம் மகாமக விழாவிவை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், ஆதீனங்கள், துறவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அகில இந்திய விசுவ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் செயல் தலைவரும், தமிழ்நாடு விசுவஹிந்து பரிஷத்தின் நிறுவன தலைவருமான வேதாந்தம், நேற்று கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கும்பகோணம் மகாமக விழாவில், மடாதிபதிகள், சன்னியாசிகள் புனித நீராட உள்ளனர். கோவில் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது. கோவிலுக்காக தனிவாரியம் அமைக்கவேண்டும். அரசு துறை அதிகாரிகள் நிர்வாகத்தை கண்காணிக்கத்தான் வேண்டும். கோவில் வழிபாடு, பூஜை முறைகள், ஆகமவிதிகளில் அரசு தலையிடக்கூடாது. வரும், 14ம் தேதி கும்பகோணம் வீரசைவ மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், தருமபுரம், மதுரை, திருவாவடுதுறை ஆதீனங்கள், காசிமடாதிபர், திருக்கருங்குடி ஜீயர், சிதம்பரம் மவுனகுரு உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், ஆதீனங்கள், துறவியர்கள் ஆகியோர் சந்திப்புக்கான ஏற்பாடுகளை விசுவ ஹிந்து பரிஷத் செய்துள்ளது. மகாமக நேரத்தில் கும்பகோணம் நகரமே ஆன்மிகத்தை ஊக்குவிக்கும் விதமாகத்தான் இருக்கவேண்டும். சிவசிவ, நமசிவாய, நமோ நாராயணாய என்ற வாசகங்களும், காவி கொடியும் கொண்ட பேனர்கள் 2,000 இடங்களில் அமைக்கப்படும். மகாமகம் மகிமை பற்றி ஆறு பக்கங்கள் கொண்ட புத்தகம், விசுவஹிந்து பரிஷத் சார்பில் வழங்கப்படும். விழாவில் கும்பகோணம் வியாபார இடமாக மாறிவிடக்கூடாது. ஆன்மிக சிந்தனையை உருவாக்கும் இடமாக அமையவேண்டும். மகாமக திருவிழாவிற்கு முக்கிய காரணமாக திகழ்பவர் கோவிந்த தீட்சிதர். அவருக்கு மகாமக குளத்தில் சிலை வைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar