பதிவு செய்த நாள்
08
பிப்
2016
12:02
மதுரை: ராமதேவர் சித்தர் ஜீவசமாதி பீடம் 8ம் ஆண்டு குருபூஜை விழா 23.2.2016 செவ்வாய்கிழமை பகவானின் ஜென்ம சுப நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தில் மதுரை, (அழகர் கோவில்) அழகர்மலையில் நடைபெறுகிறது. ராமதேவர் சித்தர் யாக்கோபு என்ற பெயரில் அரபு நாட்டில் தனது அவதார நோக்கத்தை முடித்து பல மருத்துவ நூல்களையும், இறைமையை அடையும் வழிமுறைகளையும் கூறிய பின் சதுரகிரியில் இரட்டை லிங்கத்தில் தவவழிபாடு செய்தும் மேலும் பல மருத்துவ நூல்களை இயற்றியும், இறுதியாக விருசுபகிரி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர்மலையின் உச்சியில் பதினெட்டாம்படியானின் காவலுடன் ஜீவசமாதி கொண்டு, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
குருபூஜை விழா நிகழ்ச்சி நிரல்:
நாள்: 22.2.2016 (திங்கட்கிழமை)
மாலை: 5.45 மணிக்கு- திருவிளக்கு பூஜை
இடம்: மாங்குளம் மண்டபம், அழகர்கோவில், மதுரை
தலைமை: ஸ்ரீலால் ஸ்ரீபிரம்மானந்த சுவாமிகள், கைலாசபுரம், மாங்குளம்.
23.2.2016 (செவ்வாய்கிழமை)
காலை: 5.30 மணிக்கு- 18ம் படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெறுதல்
காலை: 6.30 மணிக்கு- மாங்குளம் மண்டபத்திலிருந்து, சாதுக்கள் மற்றும் அடியார்களுடன் மலைக்கு புறப்பாடு
காலை: 9.00 மணிக்கு- அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும்
காலை: 11.30 மணிக்கு- பகவான் ஸ்ரீராமதேவர் சித்தரின் ஷோடச மந்திர நாமாவளி வெளியீடு
பகல்: 12.00 மணிமுதல் அழகர் கோவில் மாங்குளம் மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.
சிவத்திரு. ஸ்ரீசாய்பாதம் மெய்யடிமை சுவாமிகள்
ஸ்ரீசாய்பாபா திருக்கோவில், மகாலெட்சுமி நகர், நாகப்பட்டினம்.
சிவத்திரு. ஸ்ரீஞானசேகர சுவாமிகள்
ஸ்ரீமஹா பஞ்சமுக ப்ரத்தியங்கிராதேவி வேத தர்ம ஷேத்திரம்,
மானாமதுரை. ஆகியோர்கள் வருகைபுரிந்து விழாவினை சிறப்பிக்கின்றனர்.
தொடர்புக்கு:
பகவான் ஸ்ரீராமதேவர் சித்தர் அறக்கட்டளை, 212, நாயக்கர் புதுத்தெரு, மதுரை- 625 001.
செல்: 99947 93888, 88839 83605, 95858 52305.