தை அமாவாசை கோயில்கள், சண்முகநதியில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2016 01:02
பழநி: தை அமாவாசையை முன்னிட்டு பழநி சண்முகநதியில் நீராடி முன்னோர்களை நினைத்து பலர் வழிப்பட்டனர். தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களை நினைத்து நதிக்கரைகளில் சிறப்புவழிபாடுகள் செய்து வழக்கம். அதன்படி நேற்று பழநி சண்முகநதியில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து படையல் படைத்தும், தீபம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு செய்தனர். சென்னையை சேர்ந்த பக்தர்கள் உட்பட பலர் பழநி மலைக் கோயிலுக்கு பால், மயில் காவடிகள், அலகு குத்தி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 7மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதியும், சப்பரத்தில் சண்டிகேஸ்வரர், விநாயகர் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோதைமங்கலம் மானூர் சுவாமிகோயிலில் 108 பால்குடங்கள் அபிஷேகம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போல திருஆவினன்குடிகோயில், சோளீஸ்வரர், பெரியாவுடையார்கோயில் உள்ளிட்ட சிவன்கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. பாலாறு- பொருந்தலாறு அணை, பச்சையாறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடந்தது.