திருப்பூர்: போயம்பாளையம் கிழக்கு, மாகாளியம்மன், பட்டத்தரசியம்மன் கோவிலில், பூச்சாட்டு பொங்கல் விழா, கடந்த, 8ல் துவங்கி, நடந்து வருகிறது.
நேற்று, பொங்கல் பூச்சாட்டு மாவிளக்கு கொண்டு வருதல்; கிடாய் வெட்டுதல்; அலகு குத்துதல், பூச்சட்டி கொண்டு வருதல்; கும்பம் கங்கையில் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மதியம், 1:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், மறுபூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.