கும்பகோணம் நகரில் தீர்த்தவாரி கோயில்களில் மனைவிக்கு மரியாதை அளிக்கும் வகையில், அவளை மடியில் வைத்த கோலத்துடன் அமர்ந்திருக்கும் பெருமாளை ஆதி வராக பெருமாள் கோயிலில் காணலாம். தல வரலாறு: ஒரு சமயம் இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கவர்ந்துகொண்டு பாதாளத்தில் புகுந்து ஒளிந்துகொண்டான். இதைக்கண்ட வானவர்கள் வைகுண்டம் சென்று திருமாலை வணங்கி நிகழ்ந்ததைக்கூறி பூமியை காப்பாற்றும்படி வேண்டினர். பெருமாள் வராக அவதாரம் எடுத்து பாதாள லோகத்திற்கு சென்றார். அந்த அசுரனை அழித்தார். ஒரு கொம்பில் பூமியை தாங்கிக்கொண்டு மேலே வந்தார். பூமியை முன்போல் நிலைபெறச் செய்தார். இதை வெளிக்காட்டும் வகையில் பூமிதேவியை தனது இடது மடியில் வீற்றிருக்கும்படி செய்தார்.
விழாக்கள்: சிறிய கோயில் ஆனாலும்கூட, மகாமக விழாவிற்கு இத்தலத்து பெருமாள் காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார். வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அனைத்து விழாக்களும் நடக்கும்.
இருப்பிடம்: கும்பகோணம் சக்கரபாணி கோயிலின் தென்மேற்கில் இந்த கோயில் அமைந்துள்ளது.
மேலும்
கும்பகோணம் மகா மகபெருவிழா - 2016
5 பெருமாள் கோயில்கள் »