தஞ்சாவூரில் மகாமகம் 2016 சிறப்பு மலரினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2016 10:02
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர்; டாக்டர் சுப்பையன் தலைமையில் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சரஸ்வதி மகால் நூலகம் சார்பில் மகாமகம் 2016 விழாவினையொட்டி சிறப்பு மலரினை மாவட்ட ஆட்சியர் வெளியிட சரஸ்வதி மகால் நூலக நிர்வரி அலுவலர் பூங்கோதை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கும்பகோணம் மகாமகம் விழாவிற்கான முன்னேற்பாடுகளை அனைத்துத்துறை அலுவலர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். மகாமகம் விழாவில் பொது மக்களும் பக்தர்களும் பயன்படுத்துவதற்கரி துணிப்பைகள் விநியோகிக்கப்படவுள்ளது. மாசில்லா மகாமகம் கொண்டாடும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும்.இவ்விழாவினையொட்டி தமிழக அரசின் சாதனைகள் திட்டங்களை விளக்கி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கரி 137 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உயர் சிகிச்சை முகாம்கள் 20 இடங்களில் அமைக்கப்படவுள்ளது. 23 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன. 350 இடங்களில் சிசி கேமிராக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 26 ஆயிரம் காவலர்களும், 1000 தீயணைப்புத்துறை பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. தகவல் கையேடு, வழிகாட்டி பலகைகள் ஆங்;காங்கே அமைக்கப்பட்டுள்ளது. மகாமகம் குளம், பொற்றாமரை குளம் இரண்டிலும் தேவையான முன்னேற்பாடு பணிகளும் சுத்திகரிக்கப்பட்ட நீர் குளத்திற்கரி பயன்படுத்தப்படவுள்ளது. நவக்கிர கோயிலுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.