பதிவு செய்த நாள்
12
பிப்
2016
10:02
வரும், 22ல், கும்பகோணத்தில், மகாமகம் திருவிழா நடக்கும் நிலையில், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறைக்கு அரசு உத்தரவிட்டது. இப்பணிகளுக்காக, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில், கும்பகோணம்- - சீர்காழி சாலை, பழைய காவிரி பாலச் சாலை, கும்பகோணம்- - மன்னார்குடி சாலை, அதிராம்பட்டினம் சாலை, கும்பகோணம் - காரைக்கால் சாலை உள்ளிட்ட, 41 கி.மீ., சாலை சீரமைப்பு பணி துவங்கின. இப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன. சாலைகளில், எச்சரிக்கை சிக்னல்கள் பொருத்துவது உள்ளிட்ட சில பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும், ஓரிரு நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.